வெள்ளி, 29 மார்ச், 2013

                               திருமூலரின் மரபியல் சிந்தனைகள் 


 திருமுலர் திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை தமிழருக்கு முத்தான பொதுமறை .வேதாந்த சித்தாந்த வெளிவாசல் தாண்டி நாதாந்த வடிவான நாதனை காணும் ஞானம் நல்கிய தமிழ் .

     சிந்தைக்குள்ளை சிவனைக் காண சிந்தை செய்த,மானுடபிறவியின் மகத்துவத்தை பாடிய மாமனிதர் திருமுலர் .

     பாவச் சுமை மானிடப் பிறவி என்று பாடிய பக்தர் கூட் டத்தை விட்டு விலகி ,உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் என்று பாடியவர் திருமுலர் .


                     '' ஒன்றே குலம் ஒருவனே தேவனும் ''

 என்று பாடிய ஆன்ம நேய அருட்கவி திருமுலர் .பச்சிலை போதும் பரமன் பூசைக்கு ,பசுவுக்கு ஒரு வாயுணவு , ஈ என வருவோர்க்கு ஒரு பிடி சோறு இதுவே உயர்ந்த தானம் என்றும் ' ஞானபோதம் ' நல்கிய ஞானி.


       திருமுலரை அருட் கவியாக ,ஞானியாகக் கொள்வதைக் காட்டிலும் அவரை அறிவியல் சிந்தனையாளர் என்பதனை அவருடைய பாடல் முலம் உணர முடிகிறது.திருமுலரை அருட்கவியாக ,ஞானியாக கொள்வதைவிட அறிவியல் சிந்தனையாளர் என்பதனை அவர் பாடல் மூலம் உணரமுடிகிறது .  அறிவியலை தன்னுடைய ஞான அறிவால் வென்ற மெய்ஞானி என்று கொள்வதே ஏற்க்கதக்கது .

         அறிவியலின் எல்லையில் தான் மெய்யறிவு துலங்கும் .மெய் உணர்தலை அறிவியலை நெறிப்படுத்த உதவும் .ஒரு சமுதாயம் உயர வேண்டும் என்றால் அறிவியலும் மெய் அறிவும் இணைந்து இருக்க வேண்டும் .

மரபியல் சிந்தனைகள் :
                                         
                                           மரபியல் அல்லது பிறப்புரிமையியல் என்பது மரபணுக்கள் பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையான  வேறுபாடுகள் குறித்து அறியும் அறிவியல் துறையாகும் .நெடுங்காலமாக தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபு பண்புகள் பற்றி விழிப்புணர்வு மனிதர்களுக்கு இருந்தது .அந்த அறிவே விவசாயத்தில் ,தாவரங்களிலும் கால்நடைகளிலும் தேர்வு இனபெருக்கம் மூலம் அவற்றை முன்னேற்ற உதவியது .


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக